Pages

Wednesday, February 22, 2012

Book I prefer to read காவல்கோட்டம் – சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல் (Kaaval Kottam Novel - Sahithya Academy winner)


* காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.

* மதுரை நகரின், மதுரை அரசின், தென்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறுகிறது.

* விஜயநகர, பிரிட்டிஷ் பேரரசுகளின் விரிவாக்கம், ஆட்சிமுறைகளை விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கிறது.

* பத்தாண்டு காலக் கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளை இணைக்கிறது.

* வரலாற்றுப் போர்வையால் மறைக்கப்பட்டுவிட்ட முந்தைய வாழ்வியல் செய்திகளைப் பார்வைக்கு வைக்கிறது.

* இதுவரை சொல்லப்படாத வரலாற்றுச் செய்திகள் சிலவும் வெளிச்சமிடப்படுகின்றன.

* 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென்னிந்திய மண்ணில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களையும் அதிகார மாற்றங்களையும் விவரிக்கிறது.

* நாவலின் முதல் பாகத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட கற்பனையாக அன்றி வரலாற்றிலிருந்தே விரிக்கப்பட்டுள்ளன.

* காலந்தோறும் மாறிவருகிற நாட்டு நிர்வாகத்தையும் நீதிமுறையையும் படம்பிடிக்கிறது.

* காலனி ஆட்சியின் மாற்றாந்தாய்ப் போக்குகளை ஆதாரங்களுடன் சுட்டுகிறது.

* ஐரோப்பிய பாணிக் கல்வி, ரயில், மெட்டல் சாலைகள், காட்டன் மில், நவீன தொழில்நுட்பங்களின் வருகையை விரிவாகக் கூறுகிறது.

* முல்லைப் பெரியாறு அணைக்கான திட்டமிடல், கட்டுமானம், பாசனப்பரப்பு உருவாக்கம், வைகை வடகரை மக்களின் புதிய வேளாண் செழிப்பைக் கொண்டாடுகிறது.

* பழைய காவல்முறையை ஒழித்து அதன் புதைகுழியின்மேல் புதிய காவல்துறை உருவான கதை, இதனைத் தொடர்ந்து வந்த குற்றப் பரம்பரைச் சட்டம், காலனி அரசின் அடக்குமுறை ஆகியவற்றை ஆதாரப்படுத்துகிறது.

* காலங்களினூடாக விரிவாக்கப்படுகிற மீனாட்சி கோவில், மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் அழகாகக் காட்சிப்படுகின்றன.

* இனவரைவியல் பார்வையில் சமூகப்போக்குகளை விளக்குகிறது.

* இடையூறுகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் நடுவில் வாழ்க்கையைக் கொண்டாடும் கோலங்களை நகைச்சுவை தொனிக்கச் சொல்கிறது.

* தமிழ்ச்சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையக்கூடாமல் ஒதுக்கப்பட்டு களவுக்குத் தள்ளப்பட்ட ஒரு இனக்குழுவின் வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது.

* இருபெரும் பஞ்சங்கள், வெள்ளம், கொள்ளை நோய்களால் நிகழ்ந்த பேரழிவுகளை மனம் பதைக்கப் புலம்புகிறது.

* பெருமத குல தெய்வ வழிபாடு விழாக்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளை விரிவாகக் கூறிச் செல்கிறது.

No comments:

Post a Comment